Showing posts with label தமிழ்நாடு. Show all posts
Showing posts with label தமிழ்நாடு. Show all posts

Wednesday, May 1, 2013

பவர்ஸ்டார் மீது மேலும் 3 வழக்கு


நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மோசடி வழக்கில் கைதாகி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் நேற்று பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மேலும் 3 மோசடி புகார்கள் அளிக்கப்பட்டன.
கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த தேவதாசன் என்பவர் சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனு விபரம் வருமாறு, நான் கண்ணூரில் உள்ள நகை கடையில் பங்குதாரராக உள்ளேன். தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டேன்.
2010ல் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு சொந்தமான பாபா டிரேடிங் கம்பெனியின் ஏஜெண்ட் என்று சொல்லிக் கொண்டு சென்னையை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் எனக்கு அறிமுகமானார். கடன் வாங்க ஏற்பாடு செய்வதாக கூறினார்.
பின்னர் சென்னை அண்ணா நகரில் உள்ள பாபா டிரேடிங் கம்பெனியில் பவர் ஸ்டார் சீனிவாசனை சந்திக்க வைத்தார். ரூ.6 கோடி கடன் வேண்டும் என்றேன்.
இதையடுத்து என் சொத்து விவரங்கள் பற்றி சீனிவாசன் கேட்டு அறிந்தார். ரூ.5.35 கோடி கடன் பெற ஏற்பாடு செய்வதாகவும், அதற்கு கமிஷனாக ரூ.21.50 லட்சம் தரவேண்டும் என்றும் கூறினார்.
நான் ரூ.21 லட்சத்துக்கு செக்கும், ரூ.50 ஆயிரம் ரொக்கமாகவும் கொடுத்தேன். ஆனால் அவர் கடன் பெற்று தரவில்லை. பலமுறை அலைந்த பின்பு நுங்கம்பாக்கம் யெஸ் பேங்க்கில் மாற்றத்தக்க வகையில் ரூ.2 கோடிக்கு காசோலை கொடுத்தார்.
அதை வங்கியில் கொடுத்தபோது கையெழுத்து மாறி உள்ளது என்று திருப்பி கொடுத்து விட்டனர்.
சீனிவாசன் என்னை ஏமாற்றி விட்டார். மீண்டும் சந்தித்து எனக்கு கடன் வேண்டாம் நான் கொடுத்த ரூ.21 லட்சத்தை திருப்பி கொடுங்கள் என்றேன். ரூ.20 லட்சத்துக்கு செக் கொடுத்தார்.
அதை வங்கியில் செலுத்தியபோது பணம் இன்றி திரும்பி வந்து விட்டது என்றும் எனவே மோசடி செய்த பவர் ஸ்டார் சீனிவாசன் மீதும், ஏஜெண்ட் கிறிஸ்டோபர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது போல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த சென்ன கிருஷ்ணன் தனக்கு ரூ.1 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறி கமிஷனாக ரூ.10 லட்சம் வாங்கி மோசடி செய்து விட்டார் என்று புகார் செய்துள்ளார்.
அண்ணா நகரை சேர்ந்த கல்யாண சுந்தரம் என்பவர் தனக்கு வாடகை பாக்கியாக ரூ.1.80 லட்சம் தரவேண்டும் என்றும் புகார் செய்துள்ளார்.
மோசடி வழக்குகள் குவிவதால் புதுப்படங்களில் பவர் ஸ்டார் சீனிவாசனை ஒப்பந்தம் செய்த இயக்குனர்கள் தவிப்பில் உள்ளனர். அவரை நீக்கி விட்டு வேறு கொமெடி நடிகரை ஒப்பந்தம் செய்ய அவர்கள் யோசிப்பதாக கூறப்படுகிறது.

Thursday, December 29, 2011

Love Anthem For World Peace Lyrics - Simbu(STR)

dashuri dashuri
dashuri dashuri
salang salang
leifde leifde
las'ka las'ka
armastus armastus
rakkaus rakkaus
ag'api ag'api
lyubov lyubov

all we need is
love..aai..amour..amour
all we need is
love..aai..amour..amour

all we need is
love..aai..amour..amour

all we need is
love..aai..amour..amour..amour


love is full of energy
love is positivity
we don't need negativity
love to feel humanity
lets not cry and lets not try
hating,hurting and killing each other
we wont get another
life together
oh my brother

all we need is
pyaar..prema..kaadhal
all we need is
pyaar..prema..kaadhal..kaadhal




All the following words denotes love in different languages.
♥Love - English
♥dashuri - Albanian
♥salang - Korean
♥leifde - Dutch
♥las'ka - Czech
♥armastus - Estonian
♥rakkaus - Finnish
♥ag'api - Greek
♥lyubov - Russian
♥Aai - Chinese
♥Amour - French/Spanish
♥Pyaar - Hindi
♥Prema - Telugu
♥Kaadhal - Tamil

Sunday, December 25, 2011

சனீஸ்வரனை கும்பிட்ட விவேக்

தான் நடிக்கும் படங்களிலெல்லாம் சாமி கும்பிடுபவர்களையும், வாஸ்து உளளிட்டவற்றை நம்புபவர்களையும், கடவுள் பக்தி உள்ளவர்களையும் சரமாரியாக விமர்சிக்கும், நக்கலடிக்கும், கிண்டலடிக்கும் காமெடி நடிகர் விவேக், திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்குப் போய் சாமியை பய பக்தியுடன் வணங்கிய விவரம் வெளியாகியுள்ளது.

நாத்திகம் பேசுவோரில் பலரும் உள்ளுக்குள் ஆத்திகவாதிகளாகவே இருந்து வருகிறார்கள். அரசியல்வாதிகள் முதல் அத்தனை துறையினரும் இதற்கு விதிவிலக்கில்லை. திமுக தலைவர் கருணாநிதி ஒரு தீவிர நாத்திகர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரது குடும்பத்தினர் தீவிர ஆத்திகர்கள்.

அதேபோல சினிமாவில் விவேக்கைப் போல நாத்திகம் பேசியவர்கள் யாருமில்லை. நான் பெரியாரின் வழி வந்தவன் என்று பெருமை பொங்கக் கூறுவது விவேக்கின் வழக்கம். மேலும், தனது படங்களிலெல்லாம் ஆத்திகர்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கிண்டலடிப்பார் விவேக். குறிப்பாக வாஸ்து பார்க்கிறவர்களையும், நாள் நட்சத்திரம் பார்ப்பவர்களையும், சாமியை நம்பி காரியத்தில் இறங்குகிறவர்களையும் இவர் கிண்டல் அடிக்காத படமே இல்லை.

அப்படிப்பட்ட விவேக், திருநள்ளாறு கோவிலுக்குப் போய் சனீஸ்வரனை பய பக்தியுடன் வணங்கி விட்டு வந்துள்ளார்.

சமீபத்தில் சனிப்பெயர்ச்சி நடந்தது. இதையொட்டி திருநள்ளாறு கோவிலுக்கு பல லட்சம் பக்தர்கள் வந்து சனி பகவானை தரிசித்துச் சென்றனர். பரிகாரங்களைச் செய்தனர்.

சனிப் பெயர்ச்சிக்கு அடுத்த நாளான சனிக்கிழமையன்று அமாவாசை என்பதால் அது விசேஷ தினமாக இந்துக்களால் கருதப்படுகிறது. இதையொட்டி அன்றும் பல லட்சம் பேர் சனி பகவானை தரிசித்து அருள் பெற்றுச் சென்றனர்.

அந்த நாளில்தான் காமெடி நடிகர் விவேக்கும் திருநள்ளாறு கோவிலுக்கு வருகை தந்தார். அவருடன் உள்ளூர் எம்.எல்.ஏ. சிவாவும் வந்திருந்தார். கோவிலுக்கு வந்த விவேக் ஒவ்வொரு சன்னதியாக சென்று பய பக்தியுடன் சாமி கும்பிட்டார். கோவில் பிரசாதத்தையும் பய பக்தியுடன் வாங்கிக் கொண்டார்.

இந்த திடீர் 'பய' பக்தி எதனாலோ...!

Thursday, December 8, 2011

தோனிக்கு தீவிரவாதிகள் குறி : உளவுத்துறை எச்சரிக்கை!

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு தீவிரவாதிகள் குறி வைத்துள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்பவர் தோனி. தற்போது சொந்த ஊரான ராஞ்சியில் ஓய்வு எடுத்து வரும் தோனிக்கு, தீவிரவாதிகளால் ஆபத்து ஏற்படலாம் என மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதே போல் இந்தியாவிலுள்ள சில முக்கிய பிரமுகர்களை கொல்ல தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டிருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த மிரட்டல்கள் லக்ஷர்-இ-தொய்பா, மாவோயிஸ்ட் போன்ற தீவிரவாத இயக்கங்கள் விடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது வீட்டை சுற்றி ராணுவ பாதுகாப்பு அளிக்க அம்மாநில அரசு ஆலோசித்து வருகிறது.

சிறுமிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு

புதுடெல்லி : பெற்றோர் தங்களுக்கு ஏற்பாடு செய்த குழந்தை திருமணத்தை கடுமையாக எதிர்த்து நிறுத்திய மேற்கு வங்காள சிறுமிகள் 3 பேருக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பாராட்டி, பரிசு வழங்கினார். மேற்கு வங்காளம் புருலியா மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் குழந்தை திருமணம் அதிகளவில் நடக்கிறது. இதுபோல் பெற்றோர் தங்களுக்கு செய்த திருமண ஏற்பாட்டை சங்கீதா பவுரி, பினா கலிந்தி, முக்தி மஜ்ஹி ஆகிய சிறுமிகள் கடுமையாக எதிர்த்து நிறுத்தினர். இவர்கள் அனைவரும் 15 வயதுக்கு உட்பட்டவர்கள். 

பள்ளியில் படிக்கின்றனர். இவர்களின் தைரியத்தை பற்றி கேள்விப்பட்ட ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், 3 பேரையும் ஜனாதிபதி மாளிகைக்கு நேற்று அழைத்து பாராட்டி, தலா ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய ஜனாதிபதி, ‘குழந்தை திருமணத்தை இந்த 3 சிறுமிகளும் எதிர்த்ததை கண்டு மகிழ்கிறேன். இவர்கள் மற்ற சிறுமிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இருப்பார்கள்’’ என்றார். சங்கீதா அளித்த பேட்டியில், ‘‘திருமண ஏற்பாட்டை ஏற்க முடியாது என்று  எவ்வித பயமும் இல்லாமல்  எதிர்த்தேன். ஆனால், ஜனாதிபதியுடன் சந்திப்பு என்றதும் பயந்து நடுங்கி விட்டேன்’’ என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

இருமுடி இறக்கிய ஐயப்ப பக்தர்கள்!

திருச்சி : முல்லை பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக கேரளாவில் பதற்றம் நீடிப்பதால், சபரிமலைக்கு புறப்பட்ட ஐயப்ப பக்தர்கள், தமிழக கோயில்களிலேயே இருமுடி இறக்கி வழிப்பட்டு வருகின்றனர்.  முல்லை பெரியாறு அணை தொடர்பாக தமிழர்களுக்கு எதிராக கேரளாவில் அரசியல் கட்சியினர், நடிகர்கள் போராட்டம் நடத்தினர். பல இடங்களில் தமிழர்கள் தாக்கப்பட்டு அவர்களது உடமைகளும் சேதப்படுத்தப்பட்டன. கம்பம், குமுளி வழியாக சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களையும் தாக்கி விரட்டி அடித்தனர். 

இதில் ஆத்திரம் அடைந்த தமிழக மக்கள் கேரளாவை கண்டித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த பிரச்னையால் கடந்த 3 நாட்களாக கேரளாவுக்கு வாகனங்கள் இயக்கப்படவில்லை. சபரிமலை செல்ல வந்த பக்தர்களின் வாகனங்களை தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி, பெரியகுளம், ஆண்டிபட்டி, தேனி, சின்னமனூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். கடைகள் அடைக்கப்பட்டதால் உணவு கிடைக்காமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவதிப்பட்டனர். கம்பம் அருகே சுருளி அருவியில் குளித்து, அங்குள்ள வேலப்பர் கோயிலில் மாலையை கழற்றிவிட்டு சொந்த ஊர்களுக்கு நேற்று திரும்பினர். பலர் பழநி கோயிலுக்கு சென்று மாலையை கழற்றிவிட்டு ஊர் திரும்பினர். கம்பம் பள்ளத்தாக்கு ராயப்பன்பட்டியில் சண்முகா நதி அணை அருகே உள்ள ஐயப்பன் கோயிலில் இன்றும் ஏராளமான பக்தர்கள் இருமுடி இறக்கி மாலையை கழற்றி விரதத்தை முடித்தனர். இதேபோல் புதுச்சேரி, கடலூரில் இருந்து சென்ற ஐயப்ப பக்தர்கள், சபரி செல்ல முடியாமல் திரும்பி செல்லும் வழியில் திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஐயப்ப கோயிலில் இருமுடி இறக்கி நெய் அபிஷேகம் செய்துவிட்டு புறப்பட்டனர்.

இந்நிலையில், கோவை கிராஸ்கட் ரோட்டில் தமிழ்தேச பொதுவுடமை கட்சியினர் நேற்று மதியம் கேரள நகைக் கடைகளுக்குள் புகுந்து நாற்காலிகளை தூக்கி வீசினர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதுதொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை விடுவிக்க கோரி நீதிபதிகள் குடியிருப்பு அமைந்துள்ள கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் சாலை மறியல் நடந்தது. இதில் பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், மக்கள் சிவில் உரிமை கழக நிர்வாகி பொன் சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சுசி கலையரசன், தமிழ்நாடு மாநில மாணவர் கழக அமைப்பாளர் பன்னீர்செல்வம் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். 

Friday, December 2, 2011

வாடகை கார் பிரச்னை! புவனேஸ்வரி மீது புகார்!!

வாடகைக்கு எடுத்த காரை, திருப்பிக் கொடுக்காமல் 10 மாதங்களாக தன்னிடமே வைத்துக் கொண்டுள்ளார் என நடிகை புவனேஸ்வரி மீது போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது. சென்னை தி.நகரைச் சேர்ந்தவர் அசோக்குமார் (40). பைனாசியர். இவருக்கு சொந்தமான ரூ. 9 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை மாதம் ரூ. 40 ஆயிரம் வாடகைக்கு எடுத்துள்ளார் புவனேஸ்வரி. முதல் மாதம் மட்டும் வாடகை கொடுத்து விட்டு அதன் பிறகு 10 மாதங்களாக வாடகை பணம் தராமல் காரை திருப்பி ஒப்படைக்காமல் ஏமாற்றி வருவதாக அசோக்குமார், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். 

காரை திருப்பி தருமாறு கேட்டதற்கு அடியாட்களை அனுப்பி மிரட்டுவதாகவும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகார் மனு தியாகராய நகர் போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவ்வழக்கில் புவனேஸ்வரியை விசாரிக்க அவருக்கு விரைவில் சம்மன் அனுப்பப்பட இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை திரும்பினார் கனிமொழி...

சென்னை: 7 மாத இடைவெளிக்குப் பிறகு டெல்லியிலிருந்து சென்னை திரும்பினார் கனிமொழி எம்.பி. அவரை திமுக தலைவர் கருணாநிதி விமான நிலையத்துக்கு நேரில் போய் வரவேற்றார்.

2ஜி அலைவரிசை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் கடந்த மே மாதம் 20-ந்தேதி கைது செய்யப்பட்டார். டெல்லி திகார் சிறையில் 194 நாட்கள் இருந்த அவர் கடந்த மாதம் 28-ந்தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவருடன் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்பட 5 பேர் ஜாமீன் பெற்றனர்.

29-ம் இரவு 7 மணி அளவில் திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார். ஆனால் வழக்கு விசாரணை நடைபெறும் நாளில் டெல்லியில் இருக்க வேண்டும் என்பதால் அங்கேயே தங்கி இருந்தார்.

இன்று சி.பி.ஐ. நீதிமன்றத்துக்கு விடுமுறை என்பதால் 200 நாட்களுக்கு பிறகு சென்னை திரும்பினார். காலையில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். டெல்லி விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள் கனிமொழி எம்.பி.யை சென்னைக்கு வழியனுப்பி வைத்தனர். 

கருணாநிதி 

பிற்பகல் 12 மணி அளவில் கனிமொழி சென்னை வந்து சேர்ந்தும் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதி விமான நிலையம் சென்று வரவேற்றார். முன்னாள் அமைச்சர்கள், தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கனி மொழியை வரவேற்க விமான நிலையம் சென்றனர்.

கனிமொழி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது தொண்டர்கள் உற்சாகமாக கோஷமிட்டனர். கனிமொழி விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில் அவரை வரவேற்கும் வகையில் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.

தி.மு.க. கொடிகளும் பேனருடன் இடம் பெற்றிருந்தன. 'மானமிகு கனிமொழி கருணாநிதி அவர்களே வருக, இயக்கத்தின் தியாகமே, ஏழைகளின் இதயமே வருக... வருக.., எறும்புக்கும் தீங்கு இழைக்காத உனக்கு இத்தனை துயரங்கள் எதற்கு?' என்பன போன்ற வாசகங்கள் அதில் இடம் பெற்றிருந்தன.

Wednesday, October 5, 2011

சங்ககாரவுக்கு இரு விருதுகள்

ஐ.சி.சி விருதுகளில் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதினையும் மக்கள் தெரிவு விருதினையும் இலங்கை அணி வீரர் குமார் சங்ககார பெற்றுக் கொண்டுள்ளார்.

இவற்றுள் மக்கள் தெரிவு விருதுக்காக பொதுமக்கள் அளித்த வாக்குமூலம் குமார் சங்ககார தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த விருதுக்கான வாக்கெடுப்பில் தென்னாபிரிக்க அணியைச் சேர்ந்த ஹசீம் அம்லா, இங்கிலாந்து அணியைச் சேர்ந்த ஜோனத்தன் டுரோட், மேற்கிந்திய தீவுகள் அணியைச் சேர்ந்த கிரிஸ் கெய்ல்ஸ் மற்றும் இந்திய அணியின் தலைவர் மஹிந்திர சிங் டோனி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவுடனான ரெஸ்ட் போட்டியில் சங்ககார கலந்து கொண்டுள்ளமையால் அவரால் நேரில் சென்று விருதனை பெற்றுக்கொள்ள முடியாது போனமை குறிப்பிடத்தக்கது. 

தற்கொலையை தொலைபேசியில் படம் பிடித்த பெண்

மும்பை, எம்.ஐ.டி.சி. ஏரியாவில் கோல்டன் அபார்ட்மென்ட்டில் உள்ள முதல் மாடியில் வசித்தவர் சாம்தர்ஷி சிங். இவரது மனைவி நிதி சிங் (24). சாம்தர்ஷியும், நிதியும் காதலித்து, கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 4 மாதங்களுக்கு முன் இந்த அபார்ட்மென்ட்டில் குடியேறினர்.

இந்நிலையி்ல், சாம்தர்ஷி சிங் நேற்றுமுன்தினம் வழக்கம் போல காலையில் வேலைக்கு புறப்பட்டார். அவரை தடுத்து நிறுத்திய நிதிசிங் சிறிதுநேரம் அவரிடம் பேசினார். அதன்பின், சாம்தர்ஷி மீண்டும் வேலை செல்ல புறப்பட்டார். அப்போது மீண்டும் அவரை, நிதிசிங் மீண்டும் தடுத்துள்ளார்.

அதை கண்டு கொள்ளாத சாம்தர்ஷி சிங், வேலைக்கு புறப்பட்டு சென்றார். அதன்பின் சிறிது நேரத்திற்கு பின் அவரது மொபைல்போனுக்கு, ஸாரி என்ற எஸ்.எம்.எஸ். நிதிசிங்கின் மொபைல்போனில் இருந்து வந்துள்ளது. இதையும் சாம்தர்ஷி சிங் கண்டுகொள்ளவில்லை.

மதியம் நிதி சிங்கின் தந்தை, அவரை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் முடியவில்லை. மாலை மொபைல் போன் சுவிட்ச்-ஆப் என்று வந்துள்ளது.

இந்நிலையில் இரவு 9.30 மணிக்கு வீட்டிற்கு வந்த சாம்தர்ஷி சிங், வீ்ட்டு கதவை பலமுறை தட்டியும் திறக்கவில்லை. இதுகுறித்து சாம்தர்ஷி சிங், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

அவர்கள் வந்து கதவை உடைத்து பார்த்த போது, நிதி சிங் அறையின் பேனில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். நிதி சிங்கின் உடலை கைப்பற்றிய போலீசார், அதன் அருகே இருந்த மொபைல் போன் மற்றும் நிதி சிங் எழுதிய கடிதத்தை கைப்பற்றினர்.

போலீசாரால் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் தான் தற்கொலை செய்து கொள்வதற்காக, கணவனிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அடுத்த பிறவியில் 2 பேரின் குடும்பத்திற்கும் பொதுவான ஒருவராக பிறக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

உடலை கைப்பற்றிய போலீசார் நடத்திய சோதனையில் காலை 10 மணியளவில் நிதி சிங் தற்கொலை செய்திருக்கலாம் என கூறினர். மேலும் அவரது செல்போனில் நிதி சிங் தற்கொலை செய்யும் காட்சியும் பதிவாகியிருந்தது.

சுமார் 1.33 மணிநேரம் ஓடக் கூடிய அந்த வீடியோ காட்சியில், முதலில் கடந்த பிப்ரவரி மாதம் 2 பேரும் காதல் திருமணம் செய்து கொண்டதற்கு வருத்தம் தெரிவித்தார். மேலும் தாங்க முடியாத மனவேதனையால் இந்த முடிவிற்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது, நிதி சிங் மற்றும் சாம்தர்ஷி சிங் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 2 பேரும், கடந்த 4 மாதங்களுக்கு முன், இந்த அபார்ட்மெண்ட்டிற்கு குடிவந்தனர். தற்கொலை செய்து கொண்டதற்கான சரியான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றனர்.

புகை பிடிக்கும் பெண்கள்..

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புகையிலை பழக்கத்தால், இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாகஒன்பது லட்சம் பேர், இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வருங்காலத்தில் இந்த தொகை அதிகரிக்கும் அபாயம் உள்ளது' என்ற அதிர்ச்சித்தகவல், ஆய்வு ஒன்றில், வெளியாகியுள்ளது.
ஐ.நா.,வின் அங்கமான உலக சுகாதார அமைப்பு, "குளோபல் அடல்ட் டொபோக்கோ சர்வே' என்ற புகையிலை பயன்பாட்டு விகித ஆய்வை நடத்துகிறது. இந்த ஆய்வு, புகையிலை பழக்கம் அதிகம் உள்ள, 16 நாடுகளில் நடத்தப்படுகிறது.

தற்போது, இந்தியாவில் நடந்த ஆய்வில், 15 வயதிற்கு மேல், புகையிலை பயன்படுத்துவோருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த தகவல் சேகரிக்கப்பட்டது.

இதில், இந்தியாவில் நாளொன்றுக்கு, 2,500 பேர் புகையிலையால் பல நோய்களுக்கு உட்பட்டு இறக்கின்றனர். அதாவது, 40 வினாடிக்கு ஒருவர் இறக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும் புகையிலையால், 16.4 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை நகரில், "கடந்த 2005ல், 2 சதவீத பெண்களிடம் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தது' என, ஒரு ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. இப்பழக்கம் தற்போது, மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது, தற்போது, சென்னையில், 6 சதவீதம் பெண்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால், இவர்களில், 15.2 சதவீதம் பெண்கள் புகையிலை தொடர்பான புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில், மும்பை, டில்லி, கோல்கட்டா என, மற்ற நகரங்களை ஒப்பிடும் போது, சென்னையில் தான் அதிகம்.,

கடந்த 2010ல் நடந்த ஆய்வில், பெண்கள் புகையிலை தொடர்பான புற்று நோய்களால் சென்னையில், 15.2 சதவீதம்,மும்பையில், 13.5 சதவீதம், டில்லியில், 11 சதவீதம், கோல்கட்டாவில், 12.3 சதவீதம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை lol....


நிறையப் பேருக்கு இவரை மறந்தே போயிருக்கும். அந்த அளவுக்கு இப்போது சுத்தமாக தமிழில் நடிப்பதையே விட்டு விட்டார் பத்மப்பிரியா. மாறாக மலையாளத்தில்தான் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்காலிகமாக நடிப்புக்கு டாடா காட்டி விட்டுப் படிக்கப் போகிறாராம் பத்மப்பிரியா.
தமிழில் சாமி இயக்கிய மிருகம் படப்பிடிப்பின்போது இவருக்கும், சாமிக்கும் இடையே கடும் மோதலாகி விட்டது. இது பின்னர் பெரும் பிரச்சினையாகி சாமிக்கு தடையும் விதித்தனர். அந்த சம்பவத்திற்குப் பின்னர் பதமப்பிரியாவை தமிழ் சினிமாவில் மெதுவாக ஒதுக்க ஆரம்பித்து விட்டனர். அவரும் அதைப் பற்றிக்கவலைப்படாமல் மலையாளக் கரையோரமாக ஒதுங்கிக் கொண்டார். அங்கு பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பத்மப்பிரியா தற்போது நயிகா என்ற புதிய படத்தில் நடித்துள்ளார்.
அந்தக் காலத்து அழகு நடிகை சாரதாவின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம். ஜெயராஜ் இயக்கத்தில் இப்படத்தில் நடித்துள்ளார் பத்மப்பிரியா. இந்தப் படத்தை முடித்து விட்ட அவர் விரைவில் அமெரிக்காவுக்குப் பறக்கப் போகிறார். அங்கு படிக்கப் போகிறாராம்.
அப்படியானால் மறுபடியும் நடிக்க மாட்டீர்களா என்று கேட்டால், சேச்சே, அப்படியெல்லாம் இல்லை. படிப்பு முடிந்ததும் மறுபடியும் நடிக்க வருவேன். நடிப்பை விட்டு விட மாட்டேன். இடையில் கிடைக்கும் விடுமுறை நாட்களிலும் கூட நடிப்பேன்.
நான் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளேன். நடிப்பில் நான் கற்க வேண்டியது நிறைய உள்ளது.
என்னைப் பொறுத்தவரை நல்ல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளதாக கருதுகிறேன். அதேசமயம், கிளாமராக நடிப்பதிலும் ஆட்சேபனை இல்லை. அப்படி வாய்ப்பு வரவில்லை. இதனால் பெரிய அளவில் நடிக்கவில்லை. ஆனால் அது கஷ்டமான விஷயமும் இல்லை.
கதைக்குத் தேவைப்பட்டால் நிர்வாணமாகக் கூட நடிக்கலாம் என்பதுதான் எனது பாலிசி. பெண்களை கவர்ச்சியை விட்டுத் தனித்துப் பார்க்க முடியாது. அதேசமயம், அவர்களை செக்ஸியாக மட்டுமே சித்தரிப்பது என்பதை என்னால் ஏற்க முடியாது என்கிறார் பத்மப்பிரியா.

Tuesday, October 4, 2011

சந்தன கடத்தல் வீரப்பன் மகள் காதல் கணவருடன் செல்ல அனுமதி

சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி. இவருக்கு வித்யாராணி, பிரபா ஆகிய 2 மகள் உள்ளனர். வித்யாராணி சென்னையில் உள்ள மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் படித்து வந்தார். பெரம்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மரிய தீபக். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் மரிய தீபக் தனது மனைவி வித்யாவை அவரது தாயார் முத்துலட்சுமி சட்ட விரோத காவலில் தடுத்து வைத்திருப்பதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், நான் லயோலா கல்லூரியில் படித்த போது வித்யாராணியுடன் நட்பு ஏற்பட்டது. நாங்கள் இருவரும் 2 1/2 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்தோம். கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டோம். கோடம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி பதிவு செய்தோம். அதன் பிறகு இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினோம்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் எனது மனைவி வித்யாவை அவரது தாயார் முத்துலட்சுமி மேட்டூர் மேச்சேரியில் உள்ள வீரப்பன் சமாதிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கூட்டிச் சென்றார். அதன் பிறகு வித்யாராணியை என்னுடன் அனுப்ப முத்துலட்சுமி மறுத்து விட்டார். நாங்கள் இருவரும் கலப்பு திருமணம் செய்ததால் எங்களை பிரிக்க முத்துலட்சுமி முயற்சி செய்கிறார்.

எனவே எனது மனைவியை மீட்டு தரும்படி கடந்த ஆகஸ்டு 29-ந் தேதி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே முத்து லட்சுமியின் சட்ட விரோத காவலில் இருந்து வரும் என் மனைவியை மீட்டு என்னிடம் ஒப்படைக்கும்படி செம்பியம் போலீசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இவ்வழக்கை நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணன், ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலீசார் வித்யாராணியை நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தினர். நீதிபதிகள் வித்யாவை அழைத்து, நீ யாருடன் வாழ ஆசைப்படுகிறாய்? என்று கேட்டனர். அதற்கு வித்யா கணவர் தீபக்குடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன் என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், வித்யாராணி மேஜரான பெண். அவர் சட்டப்படி தீபக்கை திருமணம் செய்துள்ளார். அவர் கணவருடன் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார். எனவே வித்யா கணவர் தீபக்குடன், சேர்ந்து வாழ அனுமதி அளிக்கிறோம் என்று உத்தர விட்டனர்.

இதையடுத்து ஐகோர்ட்டை விட்டு வெளியே வந்த வித்யாவை தீபக் மகிழ்ச்சியுடன் வரவேற்று தன்னுடன் அழைத்துச் சென்றார். 

நிர்வாணமாக ஓடிய பெண்

சென்னை பல்லாவரம் மார்க்கெட் பகுதியில் நள்ளிரவில் இளம்பெண் ஒருவர் பொட்டுத் துணி கூட இல்லாமல் திடீரென நிர்வாணமாக ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பேய் என்று கூறி மக்கள் பீதியடைந்தனர்.

நேற்று பல்லாவரம் மார்க்கெட் பகுதியில் ஒரு இளம் பெண் உடைகளின்றி, தலைவிரி கோலமாக ஓடி வந்து கொண்டிருந்தார். இதைப் பார்த்து அந்தப் பகுதியில் அப்போது ரோந்து வந்து கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் கோவிந்த் உடனடியாக மகளிர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.

மகளிர் போலீஸார் போலீஸ் ஜீப்பில் விரைந்து வந்து அந்தப் பெண்ணைப் பிடித்து ஆடைகளை அணிவித்து பல்லாவரம் காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்றனர்.

அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் கூறுகையில், எனது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம், தென்கல்பாக்கம் கிராமம் ஆகும். கடந்த 6 வருடமாக அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரும், நானும் தீவிரமாக காதலித்து வந்தோம்.

10 மாதத்திற்கு முன்பு என்னை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை ராமச்சந்திரன் திருமணம் செய்து கொண்டார். எனவே செய்யாறு போலீசில் இதுபற்றி அப்போது புகார் செய்தேன். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் நான் பெரும் மன உளைச்சலில் இருந்து வந்தேன். இதனால் எனது பெற்றோர் மன மாற்றத்துக்காக பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் உள்ள எனது மூத்த சகோதரி வீட்டிற்கு என்னை அனுப்பி வைத்தனர்.

ராமச்சந்திரன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க என்ன செய்யலாம் என்று யோசித்தேன். வித்தியாசமாக எதையாவது செய்தால் போலீசார் கைது செய்து நம்மை விசாரிப்பார்கள். அப்போது நடந்ததை கூறி ராமச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க செய்யலாம் என்று நினைத்தேன். இதற்காக நள்ளிரவு நிர்வாணமாக பொழிச்சலூரில் இருந்து பல்லாவரம் வரை நடந்து வந்தேன் என்றார் அவர்.

இதற்கிடையே, இந்தப் பெண் வந்த வழியெல்லாம் அவரைப் பார்த்த பொதுமக்கள் பேய் என நினைத்து ஓடி ஒளிந்ததும் தெரிய வந்துள்ளது.

அந்தப் பெண் சொல்வது உண்மையா அல்லது மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

10 ஆண்டுகளில் 15 பேரை திருமணம் செய்த மன்மதன்

பத்திரிக்கைகளில் மணப்பெண் தேவை என விளம்பரம் செய்து கடந்த 10 ஆண்டுகளில் 15 பேரை ஏமாற்றி திருமணம் செய்து பணம்,  நகை மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வல்லபுழா பகுதியை சேர்ந்தவர் மஜீத். 10 ஆண்டுகளுக்கு முன் பெற்றோர் இவருக்கு திருமணம் செய்து வைத்தனர். அவருக்கு 3 குழந்தைகள் பிறந்தன.

6 மாத குடித்தனம்-அப்புறம் அடுத்த கல்யாணம்

பிறகு முதல் மனைவிக்கு தெரியாமல் பத்திரிகைகளில் மணப்பெண் தேவை என விளம்பரம் கொடுத்து மோசடி வேலையை தொடங்கினார்.

விளம்பரத்தில் தான் ஒரு அனாதை என்றும், தனக்கு உறவினர்கள் யாரும் கிடையாது என்றும் குறிப்பிடுவார். பிறகு தனது நண்பர்கள் சிலருடன் பெண் பார்க்க செல்லும் மஜித் திருமணம் ஆன பிறகு அந்த பெண்ணுடன் 6 மாதம் குடித்தனம் நடத்துவார்.

பின்னர் அங்கிருந்து நைசாக நழுவும் அவர் மீண்டும் பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுத்து அடுத்த பெண்ணை தேடுவார். இப்படியாக பாலக்காடு,  மலப்புரம்,  கோழிக்கோடு,  கண்ணூர் மாவட்டங்களை சேர்ந்த 15 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்.

இவர்களிடம் இருந்து நகை, பணம் ஆகியவற்றை வரதட்சனையாக பெற்று மோசடி செய்துள்ளார். கோட்டக்கல் போலீஸில் சிக்கினார்

மஜித்திடம் ஏமாந்த மலப்புரம் எடரிக்கோடு பகுதியை சேர்ந்த கதீஜா என்ற பெண் கோட்டக்கல் போலீசில் புகார் கொடுத்தார். விசாரணை நடத்திய போலீசார் மஜித்தை கைது செய்து விசாரணை நடத்தியபோது இந்த தகவல்கள் வெளியாகின.

16 வயதுப் பெண்ணை மணக்க முயற்சித்தபோது கைது

16வது பெண்ணை ஏமாற்ற பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுப்பதற்கான பணியில் ஈடுபட்டிருந்தார். மஜீத் ஏமாற்றிய பெண்களின் விபரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

மணப்பெண் ஓட்டம்

காஞ்சீபுரம் மாவட்டம் கட்டரம்பாக்கம் கிராமத்தில் உள்ள மாசிலமணி. இவரது மகள் பார்வதி(வயது 19). இவர் எஸ்.எஸ்.எல்.சி. படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

இவரது பக்கத்து வீட்டில் மாரிச்சாமி(22) தங்கியிருந்து பிரபல தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் பார்வதிக்கும் காதல் மலர்ந்தது.

இந்த காதல் விவகாரம் தெரியாமல் பார்வதிக்கு அவரது தந்தை மாசிலாமணி மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்.  மோகன்(25) என்பவரை மணமகனாக தேர்வு செய்து நிச்சயதார்த்தம் நடந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை(16 ந் தேதி) திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் முதல் நாள் இரவே மணப்பெண் பார்வதி காதலன் மாரிச்சாமியுடன் ஊரைவிட்டு ஓடி விட்டார்.

இதனை அறியாமல் பார்வதி வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்தனர். மறுநாள் காலையில் எழுந்து திருமண நிகழ்ச்சிக்கு தேவையான வேலைகளை செய்து கொண்டு இருந்தனர்.

மணப்பெண் நீண்ட நேரம் ஆகியும் அறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பெண்ணின் தாய் அறைக்கு சென்று பார்த்தபோது பார்வதியை காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தனது மகளை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கேயும் கிடக்கவில்லை

பின்னர் பக்கத்து வீட்டில் இருந்த மாரிச்சாமியும் காணவில்லை என்பது தெரியவந்தது. இதனை அடுத்து பார்வதியின் தோழிகளிடம் விசாரித்த போது மாரிச்சாமியும் பார்வதியும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததும் தெரிந்தது.

மறுநாள் அதிகாலையில் திருமணம் என்பதால் மாப்பிள்ளை வீட்டாருக்கு என்ன பதில் செல்வது என்று பார்வதியின் பெற்றோரும் உறவினர்களும் வழி தெரியாமல் தவித்தனர்.

அதே முகூர்த்த நேரத்தில் எப்படியாவது திருமணத்தை நடத்தி விடவேண்டும் என தீர்மானித்தார்கள். அதன்படி மாசிலாமணியின் தம்பி மகளான துர்காவை மணமகளாக்கி மோகனுக்கு திருமணம் செய்து கொடுப்பது என முடிவு செய்தனர்.

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த துர்கா திடீர் மணமகள் ஆனார். இதனை மாப்பிள்ளை வீட்டாருடன் ஏற்று துர்கா கழுத்தில் மோகன் தாலி கட்டினார்.

மணமகள் பார்வதி மாயமானது குறித்து அவரது தந்தை சோமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்து ஓடிப்போன மணப்பெண் பார்வதி மற்றும் காதலன் மாரிச்சாமியை தேடி வருகின்றனர்.

ஐஐஎம் மாணவி பேஸ்புக் செய்தியால் தற்கொலை செய்து கொண்டார்

ஐஐஎம் மாணவி மாலினி முர்மு பேஸ் புக் சமூக நெட்வொர்க்கில் 727 நண்பர்களுடன், பெரும்பாலும் நிறுவன நண்பர்கள் மற்றும் கல்லூரியில் மாணவ ,மாணவியர்களுடன் இணைப்பில் இருந்தார் போல் தெரிகிறது . இதில் ,மாலினி தனது காதலன் அபிஷேக் தண் புண்படுத்தக்கூடிய செய்தியே பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார் அவர் தனது காதலி "டம்ப்" என்று தெரிவித்திருந்தார் . இதனை தொடர்ந்து மாலினி பெங்களூர் இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐ.ஐ. எம்) தனது விடுதி அறையில் அன்று மாலை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் . .

அவர் இறப்பதற்கு முன் அவரது அறையில் வெள்ளை போர்டில் எழுதிஉள்ளார் அதில் "அவர் என்னை ஏமாற்றிவிட்டார் . இது நான் அவனை பழிவாங்க செய்வது." இந்நிலையில் ஐஐஎம் வெளியிட்ட அறிக்கை இன்று "பெங்களூர் போலீஸ் தற்கொலை வழக்கு செய்துள்ளனர் .செல்வி மாலினி முர்மு , 23, ஜாம்ஷெட்பூர் சேர்ந்தவர் . தனது பி டெக் முடிந்தவுடன் இன்போசிஸ் வேலை நிலையில், கடந்த ஜூன் ஐஐஎம்பி இருந்து வந்தவர் . நாங்கள் ஒரு இளம் பெண்ணின் பிரகாசமான வாழ்கையே இழந்துள்ளோம் .

கணவரின் நண்பரை மணக்க துடிக்கும் பெண் போலீஸ்


சென்னை, செப். 7: கணவரின் நண்பரை எப்படியாவது மணந்தே தீருவேன் என்று சென்னையை சேர்ந்த பெண் போலீஸ் ஏட்டு அடம்பிடித்து வருகிறார். பாதிக்கப்பட்ட பெண் கமிஷனரிடம் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை, போரூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேகா (35). இவரது கணவர் விஜயசந்திரன் (40). இந்நிலையில், சுரேகா சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் நேற்று புகார் ஒன்று அளித்தார். அதில் “எனது கணவர் விஜயசந்திரனை தாம்பரம் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் தலைமை பெண் காவலர் ஒருவர் மணந்தே தீருவேன் என்று அடம்பிடிக்கிறார். இதனால், எனக்கு பயமாக உள்ளது. எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். தலைமை காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: விஜயசந்திரனும், தாம்பரம் போலீஸ் ஸடேஷனில் பணிபுரியும் பெண் ஏட்டுவின் கணவரும், கால்டாக்சி டிரைவருமான  தியாகராஜனும் நெருங்கிய நண்பர்கள். தியாகராஜனுக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் தியாகராஜனுக்கும், பெண் ஏட்டுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும்.
கணவனை திருத்த அவரது நண்பர் விஜயசந்திரனை பெண் ஏட்டு அணுகி உள்ளார். விஜயசந்திரனும்,  உதவி செய்தார். மருத்துவமனையில் சிகிச்சை அளித்து தியாகராஜனின்  குடிப்பழக்கத்தை நிறுத்தினார்.  இதற்கிடையில், பெண் ஏட்டுக்கு விஜயசந்திரன் மீது ஆசை ஏற்பட்டுள்ளது. அவரை மணந்து கொள்ள நினைத்தார். பல முறை இதுகுறித்து விஜயசந்திரனிடம் பேசியுள்ளார்.
இந்த தகவல் சுரேகாவுக்கு தெரிந்தவுடன் அதிர்ச்சி அடைந்தார். பெண் ஏட்டை சந்தித்து சண்டை போட்டுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த அவர் ‘விஜயசந்திரனை பலாத்கார வழக்கில் உள்ளே தள்ளி விடுவேன்’ என்று சுரேகாவை மிரட்டி உள்ளார். இதனால், பயந்து போன சுரேகா கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து, தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு போலீசார் கூறினர்.

உள்ளாட்சி தேர்தல் – கட்சிகள் தீவிரம் Parties gear up for TN local body polls


தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப் பதிவு அக்டோபர் மூன்றாவது வாரத்தில் நடைபெற உள்ளது. இதையடுத்து கட்சிகள் விருப்பமனு வாங்குதல் உள்ளிட்ட பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.
அக்டோபர் 21-ம் தேதியுடன் தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவி காலம் முடிவடைகிறது. எனவே, அக்டோபர் 20-க்குள் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் 10 மாநகராட்சிகள் உள்ளன. 152 நகராட்சிகளும், 555 பேரூராட்சிகளும் இருக்கின்றன. 385 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. கிராம பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 618. உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான பதவிகள் உள்ளன. இதற்கான வாக்காளர் பட்டியல்கள் புகைப்படங்களுடன் வார்டு வாரியாக தயாரிக்கப்பட்டு தயாராக இருக்கின்றன.
வாக்குச் சாவடிகள் எங்கு அமைக்கலாம் என்ற பட்டியலும் தயாரிக்கப்பட்டு விட்டது. தேர்தல் பணியாளர்கள் எவ்வளவு தேவை? பதட்டமான இடங்கள் எவை என்பது பற்றிய விவரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சி மேயர்கள், நகராட்சி தலைவர்கள் இந்த முறை நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். வார்டு கவுன்சிலர்களுக்கு தனியாக ஓட்டுப் போட வேண்டும். பஞ்சாயத்துகளில் பஞ்சாயத்து தலைவர், கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ஆகிய 4 பேரை தேர்ந்து எடுக்க ஓட்டுப் போட வேண்டும்.
நெல்லை, சேலம், தவிர மற்ற மாநகராட்சிகளில் புதிய வார்டு முறைப்படி தேர்தல் நடக்கிறது. நகர்புற பகுதிகளில் உள்ளவர்கள் 2 ஓட்டுகளும், கிராமபுற பகுதியை சேர்ந்தவர்கள் 4 ஓட்டுகளும் போட வேண்டியது இருக்கும். எனவே நகர்புற பகுதிகளில் மின்னணு இயந்திரங்களை பயன்படுத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து 60 ஆயிரம் மின்னணு ஓட்டு எந்திரங்கள் ஒதுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
கிராம பகுதிகளில் வாக்குச் சீட்டு முறையில் ஓட்டுப் பதிவு நடைபெறுகிறது.உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு மாநில தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது.
உள்ளாட்சி தேர்தலை 2 கட்டமாக நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் அறிவிப்பு எந்த நேரமும் வரலாம் என்பதால் அரசியல் கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.
அ.தி.மு.க. கூட்டணியில் சட்டசபை தேர்தலில் இடம் பெற்றிருந்த கட்சிகள் தேமுதிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சமக உள்ளிட்டவை நீடிக்கின்றன. ஆனால், தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி விட்ட பா.ம.க., புதிய கூட்டணியை உருவாக்க முயன்று வருகிறது. ம.தி.மு.க., உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் என்று வைகோ அறிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலிலும் காங்கிரசுடன் கூட்டணி தொடரும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் திமுக கூட்டணியில் இருக்குமா, இல்லையா என்பது மதில் மேல் பூனையாக உள்ளது.
அதிமுக, திமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு வாங்கப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தல் தொகுதி உடன்பாடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பேச மூவர் குழுவை அதிமுக பொதுச்செயலாளர் நியமித்துள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே உள்ளாட்சி தேர்தல் பணிகளில் கட்சிகள் தீவிரம் காட்டத் தொடங்கி விட்டன.

40 நாள் ஆண் சிசுவை அடித்து கொன்ற கொடூர தந்தை


சேலம், செப். 7: பிறந்து 40 நாளேயான ஆண் சிசுவை திண்ணையில அடித்து கொன்ற கொடூர தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் ஓமலூர் அருகே உள்ள பனங்காட்டை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (25). இவரது மனைவி வனிதா (21). அதே பகுதியில் உள்ள சாமிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், 40 நாட்களுக்கு முன்பு வனிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
தற்போது குழந்தையுடன் வனிதா பெற்றோர் வீட்டில் வசிக்கிறார். திருமணம் ஆனது முதல் வனிதாவை ஜெகதீஸ்வரனின் தாய்க்கு பிடிக்காமல் போனது. அதனால், ஜெகதீஸ்வரனுக்கும் வனிதாவை பிடிக்காமல் போனது. அடிக்கடி மனைவியிடம் சண்டை போட்டு வந்தார்.
நேற்று மாலை வேலை முடிந்து வனிதா வீட்டுக்கு ஜெகதீஸ்வரன் வந்துள்ளார். வழக்கம் போல் வனிதாவிடம் தகராறு செய்து விட்டு, குழந்தையை அவரது பெற்றோர் வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார். இரவு 8 மணி அளவில் குழந்தையுடன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வனிதாவின் தந்தை முருகேசன் அவரது வீட்டின் வெளியே இருந்த திண்ணையில் அமர்ந்திருந்தார். மாமனாரைப் பார்த்ததும் குழந்தையை அடித்துள்ளார். ‘பச்சிளம் குழந்தையை ஏன் அடிக்கிறாய்?’ என்று அவர் கேட்க, அதே வினாடி இந்தக் குழந்தையால் தானே இத்தனை பிரச்னை என்று கூறி, அவர் அமர்ந்திருந்த திண்ணையில் குழந்தையின் தலையை ஓங்கி அடித்துள்ளார்.
இதைப்பார்த்த முருகேசன் கூக்குரல் எழுப்ப வனிதா மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். தலை பிளந்து ரத்தம் கொட்டுவதைப் பார்த்தவுடன் ஜெகதீஸ்வரன் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். படுகாயம் அடைந்த குழந்தையை சேலம் அரசு மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை குழந்தை இறந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ஓமலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய ஜெகதீஸ்வரனைத் தேடி வருகின்றனர்.